Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 MAR 1938
இறப்பு 11 DEC 2013
அமரர் பொன்னையா நாகம்மா 1938 - 2013 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் கல்விளானை வசிப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம் மத்தியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நாகம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா!
அம்மா எங்களை விட்டு நீங்கள்
பிரிந்து பத்து வருடங்கள் பறந்தோடிப்போனது
அம்மா நீங்கள் எங்களுடன் இல்லை என்ற
நிஜம் பொய்த்துதான் போகாதோ
ஆயிரம் உறவு இருந்தாலும்
நீங்க இல்லாததால் அனாதைகள்தான் நாங்களும்!

ஆண்டுகள் பல ஓடினாலும்
உங்கள் இழப்புதனை
இதயம் ஏற்க மறுக்குதம்மா
இன்னும் கொஞ்சக்காலமாவது
எங்களுடன் வாழ்ந்திருந்திருக்கலாமே அம்மா
இதயங்கள் ஏங்கிடும் உணர்வுகள் துடித்து
விழி நீர் பெருக்கெடுக்குமம்மா!

அம்மா உங்கள் தியாக அன்பின் முன்னால்
மண்டியிட்டு பூஜிக்கின்றோம்
அம்மா உங்கள் பிள்ளைகளாய் பிறந்திட
என்ன மாதவம் செய்தோம் நாமும்
சின்ன வயதினல் துணையை இழந்தும்
சின்னஞ்சிறு குழந்தைகள் எமக்கு
சிறந்ததொரு தந்தையும் தாயுமாகி
எமை வளர்க்க நீங்கள் பட்ட இன்னல்கள் துன்பங்களை
எம்மேல் சுமத்தாது படிக்க வைத்து
நன் மகவுகளாய் வளர்த்து
தூய அன்பால் எமை தூக்கி நிறுத்தி
வாழ வைத்த சிங்கப் பெண்ணம்மா நீங்கள்!

ஆண்டுகள் சென்றாலும்
எம் ஆயுள் முடியும் வரை
எங்களுடன் நீங்களும் அம்மா
ஆண்டவர் பாதத்தில் அமைதியாகட்டும்
உங்கள் ஆத்மாவும்...

நன்றி

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute