Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 DEC 1941
இறப்பு 01 DEC 2019
அமரர் பெருமாள் இராசமணி
வயது 77
அமரர் பெருமாள் இராசமணி 1941 - 2019 நீர்வேலி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பெருமாள் இராசமணி அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெருமாள் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, பாக்கியம், மகேஸ்வரி, நடராசா மற்றும் கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசமலர், காலஞ்சென்ற இதயராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

தயானி(லண்டன்), தயாகரன்(நெதர்லாந்து), தயாரூபி, தயாராஜி, தயாபரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

துசாந், திசான், ஆதர்சன், ஆரோன், அபினிஷா, ஹேமிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்