Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 11 OCT 1946
இறப்பு 25 APR 2022
அமரர் பேரம்பலம் சண்முகநாதன் 1946 - 2022 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொல்லவிளாங்குளம் வவுனிக்குளத்தினை வதிவிடமாகவும், தற்போது யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை  23-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 6.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியை 25-05-2022 புதன்கிழமை அன்று பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சமேதராய் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி :
இல-87,கொல்லவிளாங்குளம்,
வவுனியா.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்