திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மகிரி முத்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-02-2026
கண்ணில் அழுகை ஓயவில்லை
எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உங்களை தேடுகையில்
விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
பறி கொடுத்து விட்டாலும்
உங்கள்
பாசத்தைப் பறித்துவிட
எத்தனை
ஜென்மம் வேண்டும் அவனுக்கு!
நீங்கள் எனக்கு வழங்கிய பாச
உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில்
நீங்கள்
என்றென்றும் எங்களை
நல்வழியில்
நடத்துவீர்கள் என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.
ஆண்டு ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம் அப்பா...
உங்கள் நினைவுகளில் எம் கண்கள்
உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உம் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது...
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
நெஞ்சில் என்றென்றும்
பசுமையாய்
நிலைத்திருக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
நாம் வருந்துகின்றோம் ஏங்குகின்றோம் மீண்டும் உன் சிரித்த முகம்கான ஏங்கி நிற்கிறோம் உன் பிரிவை ஏற்க மறுக்கிறோம்…!கிரி அண்ணா 😢