உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, திருவையாறு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்தினி வைத்தியநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள் உயிரான தெய்வமே! என் உலகமே நீ தான் என்றிருந்தேன் ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை! அம்மா! உன் இனிமையான நினைவுகளை நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!
நேற்று போல் இருக்கிறது உன் நெஞ்சகலா அந்நினைவு! நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை நினைக்கையிலே ஏன் என்னை மறந்தாய் அம்மா!
எங்களுக்கான இலக்கணம் படைத்த உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள் சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!