யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சீதாலட்சுமி அவர்களின் அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், அன்னாரின் வீட்டுச் சாமுண்டிக்கரணக் கிரியைகள் எதிர்வரும் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்களது குடும்பத்தினரும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.