Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1937
இறப்பு 17 DEC 2018
அமரர் பறுநாந்து அருளானந்தம்
வயது 81
அமரர் பறுநாந்து அருளானந்தம் 1937 - 2018 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரம் மல்லிகைத்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பறுநாந்து அருளானந்தம் அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பறுநாந்து இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

கிறிஸ்ரி, இராசேஸ்வரி(ராசாத்தி), டேவிட் இராஜரட்ணம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லூர்த்தம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அந்திரேஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,

வனிதயோதி(ஆசிரியை- புதுக்குடியிருப்பு அரசரட்ணம் வித்தியாலயம்), தர்மகுலசிங்கம், மாலதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஆனந்தி, அனுசியா, அஸ்வின்(ஜெர்மனி), சனோபா(யூலி), ஆசா(தர்சினி), சுதர்சன், றொசான், றொக்சி, நிக்சன், றொசானி ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரங்கிளின், லக்சனா, பிரான்சிஸ்கா, அனோசிலின், சயானி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-12-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு, புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அங்கிருந்து புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்