
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமசாமி யோகராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பா
நீங்கள் இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?
எங்கள் விடிவெள்ளியே!
மீளவும் பெற முடியுமா நீங்கள் எம்மோடு
கூடிக்குலாவிய நாட்கள் ஒன்றென்ன
பல தசாப்தங்கள் கடந்து சென்றாலும்
எம் நெஞ்சை விட்டகலா உம் நினைவுகள்
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான புன்னகை முகத்தை
தொலைத்து விட்டு அமைதியற்று வாழ்கிறோமே
உங்கள் பிரிவால் துயருடன்
வாழும் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+0773119841(இலங்கை)
+0766813101(இலங்கை)