யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை ES பெர்னாண்டோ மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் ஜெகதீஸ்வரன் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமநாதன், திலகலக்ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணபிரியா ஈஸ்வரநர்த்தன், கார்த்திகேயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதாம்பிகை, மாலினி, குஞ்சிதபாதம், விக்னேஸ்வரன், சிவகுமாரன், குருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீபன், லாவண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுருதிகா, கிறிஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Dr. சரோஜினிதேவி, Dr. சாரதாதேவி, Dr. சோமஸ்கந்தராஜா, காலஞ்சென்ற K.S ராஜா(அறிவிப்பாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 10:00 மணி முதல் மாலை 07:00 மணி வரையும், 22-10-2025 புதன்கிழமை அன்று காலை 08:30 மணிக்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We are so devastated to hear the news about Jegan Periappa. Our heart is absolutely breaking for you all. He was such a wonderful person, and I know how much he meant for all of you. I'm holding...