1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பஞ்சாட்சரம் பாலு
ஓய்வு பெற்ற நில சீர்திருத்த ஆணைய இயக்குனர்(LRC)- மட்டக்களப்பு
வயது 90
Tribute
22
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 04-06-2021
யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் பாலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுடராய் ஜொலித்த எங்கள் பாசத்தின் ஒளி அனைத்து
ஒரு வருடம் ஆகிவிட்டதே எங்கள் அப்பாவே !!
கண்கண்ட தெய்வத்தை கண்களில் கண்ணிரோடும்
இதயத்தை இருட்டாக்கி ஆறாத்துயரில் எங்களை வீழ்த்தி
மீளாத துயில் கொள்ள வைத்தீர்களே அப்பா!!
உலகில் உத்தமராய் நாம் வாழ
உயர்ந்த பண்பூட்டி எங்களுக்காய்
வாழ்ந்த எங்கள் ஆருயீர் அப்பாவே !!
நித்தம் உங்களை நினைத்து இறைவனிடம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்!!!
உங்கள் நீங்காத நினைவுடன் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்