யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் இல 56/2 ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலராசா தவமணி அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடேசப்பிள்ளை, வேலாயுதப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கோபாலப்பிள்ளை மற்றும் தமோதரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாரஞ்சினி, நவரஞ்சன், தவரஞ்சன், கலாரஞ்சன், காலஞ்சென்ற கலைவாணி, நிவாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரராசா, தனதேவி, குகதர்சினி, உதயலலிதா, தயாநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, பராசக்தி, சேதுபதி மற்றும் அபிராமிப்பிள்ளை, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தரணிகா, கயானிகா, பிரியங்கன்,மதுரங்கன், கோவர்ணன், லசானி, தக்ஷனா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஓவியன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2024 புதன்கிழமை அன்று அவரது வீட்டில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் உருத்திரபுரம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details