1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அம்மா எங்கள் தெய்வமே
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
கண்ணீர் சிந்த விட்டுச் சென்று
ஆண்டு ஒன்று ஆனதோ?
அம்மாவாய் எம்மை அரவணைத்து
தந்தையாய் எம்மை கண்டித்து
ஆசானாய் எமக்கு பாடம் புகட்டி
தெய்வமாய் எம்மை காத்து நின்ற
எங்கள் கோயிலே- இறைவனடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆனதோ..?
அம்மா
ஒவ்வோர் ஆண்டும்
உங்கள் அன்பு முகத்தை
பார்த்த எனக்கு கடைசி நொடிகளில்
என் தெய்வத்தைக் காண
கிடைக்கவில்லையே!
இனி உங்கள் அன்பு முகத்தை எப்போது காண்பேன்
என் கடைசி மூச்சு வரை
உங்கள் நினைவு - என்
நெஞ்சில் கனமாய் இருக்கும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute