நொய்லின் அமலதாஸ்:-
யாழ். நறுவிலடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நொய்லின் அமலதாஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குயின்ரன் அமலதாஸ்:-
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்டிருந்த குயின்ரன் அமலதாஸ் தமையாம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள்
முகம் என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
அம்மா அப்பா!!
நீங்கள் இறையடி எய்து
ஈராண்டு ஆகியும் நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏங்கு மறைந்தீர்?
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!