Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 APR 1954
இறப்பு 25 APR 2021
அமரர் நவரத்தினராசா சரஸ்வதி 1954 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு நடுவு திருத்தி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 201/52, 6ம் ஒழுங்கை கோவில் புதுக்குளம் வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினராசா சரஸ்வதி அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், புங்குடுதீவு நடுவுதிருத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நயினாதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், வடிவாம்பிகை(ஆதின கர்த்தா - நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரத்தினராசா(செயலாளர்- கோவில்குளம் சிவன்கோவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஷ்ணுகரன்(பிரான்ஸ்), விசாகை(ஆசிரியை - வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), கௌசிகன்(பிரான்ஸ்), கார்த்திகாயினி(ஆசிரியை - கோவில்குளம் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிருந்தா(பிரான்ஸ்), கஜேந்திரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் - வலயக்கல்வி அலுவலகம், வவுனியா வடக்கு), சுஜிதா(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(சமுர்த்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்ற சரோஜினிதேவி, ரதிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துளசிநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவராமகுகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சின்மகி, பார்கவி, ஜெஸ்வின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காசினி, சபரிவாசன், தர்மிகன், ஹர்சிகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோவில்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்