1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். காரைநகர் பலகாடைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  நவரத்தினம் கனகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:26-10-2023
ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
 மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள் போல்
 தவிக்கின்றோம் உம் பிரிவால்
நிஜமாய் கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும் போது
நெஞ்சம் விம்முகிறது...
உம்மிடத்தை
 நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
 உமக்கிணையாய் யாருமில்லை...
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம் நினைவு...
 அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது
 எங்கள் மனம்...
மறுபடியும் 
உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் 
இவ்வுலகில்...
                        தகவல்:
                        ரவிச்சந்திரன் (மகன்), ரவிசக்தி (மருமகள்), ராகவி (பேர்த்தி), ராகவன் (பேரன்), ஜோதி (பேர்த்தி)