
முல்லைத்தீவு தண்ணீரூற்று மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் விவேகானந்தராசா அவர்கள் 15-12-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பார்வதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வித்தியானந்தராசா, சர்வானந்தராசா, சச்சிதானந்தராசா, பாக்கியநாதன் மற்றும் யோகராணி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணானந்தராசா, தவராணி, சறோசா, காலஞ்சென்ற தவறஞ்சிதம் மற்றும் வனிலாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசோதரன்(இலங்கை), குமுதரஜனி(லண்டன்), கிரிதரன்(சுவிஸ்), தசீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தி(ஆசிரியர்- இந்து தமிழ்கலவன் பாடசாலை), றெஜிந்திரன்(லண்டன்), சுபாஜினி(இந்தியா), லக்சி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வெர்ஜினி, றெமி, திலக்சன், சயூகன், கரீஸ்மன், டிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details