முல்லைத்தீவு கணுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட நற்குணம் இராசம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் பொக்கனைக்கடலிலும் வீட்டுக்கிருத்திய கிரியை 07-11-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 07ம் வட்டாரம்,
சிவநகர்,
புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு.
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.