2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நன்னித்தம்பி தயாசீலன்
(தயா)
வயது 61
Tribute
34
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நன்னித்தம்பி தயாசீலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு நீங்கள் பிரிந்து
இரண்டு வருடம் ஆகிவிட்டது..
நித்தமும் உங்கள் உறவை நினைத்து
நீங்கா நினைவுடனும்
யார் வந்து ஆற்றியும்
ஆறாத வலியுடனும் வாழ்கின்றோம்...
எம்மைவிட்டுச் செல்ல
உங்களால் எப்படி முடிந்தது?
ஒளிமயமாக இருந்த எங்கள் வாழ்க்கையில்
யார் கண்பட்டதோ?
இல்லை யார் தான் சாபமிட்டதோ?
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும் நிகருண்டோ?
விழிநீரை மழையாக்கி
எம்மை வேதனையில் ஆழ்த்திவிட்டீர்...
எம் விழிநீர் துடைத்திட நீர்
விண்ணைத்தாண்டி வருவீரா?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்தனை செய்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்