Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAR 1932
இறப்பு 24 DEC 2019
அமரர் நாமகள் சண்முகநாதன்
வயது 87
அமரர் நாமகள் சண்முகநாதன் 1932 - 2019 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட நாமகள் சண்முகநாதன் அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் மருதையனார்(வேலணைத் தமிழறிஞர்- முன்னாள் கிராமசபைத் தலைவர்), மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற ஏ. சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமகள் கேதாரநாதன், காலஞ்சென்ற தனிநாயகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆத்மநாதன், நிர்மலன் மற்றும் அருள்நிதி இராதாகிருஷ்ணன், விமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற இலிங்கப்பிள்ளை, புவனேஸ்வரி இலிங்கப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,

இராதாகிருஷ்ணன், சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேகலை, கோசலை, யசோதை, திருமகன், சிற்பரன், தயா, அனுஷா ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

மானி- சிந்துஜா, காவேரி, கஜன், அத்தன், குகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வேந்தன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-12-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 23 Jan, 2020