10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நல்லதம்பி வினாயகமூர்த்தி
முன்னாள் காகித ஆலை ஊழியர்
வயது 66
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை கறுவாக்கேணியை வசிப்பிடமாகவும், கனடா மார்க்கம் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி வினாயகமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம்
வாழ்வை வளப்படுத்துவீரே!
தகவல்:
குடும்பத்தினர்