12ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கரம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லநாதன் சிவசோதி அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாகக் காத்த எங்களின் இதயக்கோயிலே!
பன்னிரெண்டு மாதம் பறந்தேறி விட்டதம்மா!
பக்கத்தில் நாம் இல்லையென்பதால்
பகல் கனவு போல் உள்ளது.
எங்களின் தங்கமான தங்க அம்மாவே!
எங்களின் அன்பு தாயின் முற்றத்தில் வந்து
தாகம் தீர்த்தோர் எத்தனை பேரம்மா!
எங்கள் அன்பு அம்மாவின் வீட்டிற்கு வந்து
விருந்தே உண்டோர் எத்தனை பேரம்மா!
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன் என்றுணர்ந்தோம்
உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்