உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கிளிநொச்சி கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நல்லம்மா அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னமுத்து, காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கற்பகம் குமரசாமி அவர்களின் அன்பு மைத்துனியும்,
இந்திரகுமார், இந்திராதேவி, கமலாதேவி, கமலநாதன், இரதிதேவி, யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆதர்சன், ஆதிக்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2021 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.