யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லையா துரைராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
ஓராண்டு காலம் சென்றிருந்தால் என்ன
அப்பா உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே கற்றாடுதப்பா!
எங்கள் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அப்பா!
பாசத்தின் கருவியாய் பண்பின்
சிகரமாய்
அன்பின் திருவுருவாய்
எதை நீர்
செய்தாலும் கண் போல
எமை எல்லாம்
காத்து யாவருக்கும்
ஆசை மொழி கூறி
அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
அலை அலையாய் வரும் கடல் கூட
வெயிலில் வற்றி விடும் அப்பா
என் கண்ணில் கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு என்னை
பித்தம் கலக்க வைக்கிறது அப்பா...
ஆயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!