
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறை புளியங்கூடலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சத்தியானந்தன் அவர்களின் 6ம் மாத நினைவஞ்சலி.
ஆறு மாதங்கள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
எமக்கு பாசத்தைப் பன்மடங்காய்
வாரி வழங்கிய வள்ளல் நீரல்லோ!
இன்று உங்கள் பாசத்திற்காய் ஏங்கவிட்டு
எங்கு சென்று விட்டீர்கள்!
ஒரு போதும் நினைக்கவில்லை
எம்மைத் தவிக்கவிட்டுச் செல்வீர் என்று
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் 6ம் மாதம் நினைவஞ்சலி 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
தம்பி செல்வன் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் ஓம் சாந்தி. rest in peace இந்தா canada