

யாழ். வேலணை 1ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினேஸ்வரி, சிவதாஸ், ஞானேஸ்வரி, மகேஸ்வரி, விமலேஸ்வரி, காலஞ்சென்ற கிருபானந்தவதி, ரஜனிதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, ஏகாம்பரம், குலசேகரம்பிள்ளை, கிருஷ்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினராஜா, இந்திராணி, பரராஜசிங்கம், சடாட்சரன்(ஜெகன்), கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், மகாலட்சுமி, செல்லம்மா, ஆறுமுகம், அன்னலட்சுமி மற்றும் ரதி, வரதா, அம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதிஷ்ட்ரா- விமலதாசன், தனஞ்ஜினி- சிவாஸ்கரன், சுதர்ஸனன்- சர்மதா, ஷாரங்கன், காலஞ்சென்ற தபோதனன், சஞ்சயன்- கஜீதா, ஜனார்த்தனி- கஜீரன், சாம்பவி, பிரணவி, காலஞ்சென்ற கிருஷானந், கெளரிசங்கர்- ஜீவனா, கஜன், குபேரன், மயூரி- ஜெயகாந்தன், ஷாமளை- ராகசுதன், விதுரன், கீதசபா, வைஷ்ணவி- கோபி, விதுஷன், நிதுஷன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
மாதுளா, மாதவன், சியாமளன், சேயோன், ஐஸ்வர்யா, அவிக்னன், சேனன், லக்ஷ்மி, ரிஷிகேசன், ஹாசினி, மாதினி, சனகன், சரண், யஸ்வின், ராதுஷாந் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பு அக்காவின் மரணசெய்தி அறிந்து துன்பம்அடைந்தேன். அவவின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகின்றோம் இங்கனம் செல்லமுத்து. வேலாயுதபிள்ளை.பிள்ளைகள்.