1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகேஸ்வரி பத்மநாதன்
(பேபி)
வயது 78
அமரர் நாகேஸ்வரி பத்மநாதன்
1945 -
2023
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 12-09-2024
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மணிக்கூட்டு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி பத்மநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
விண்ணுலகு விரைந்து ஓராண்டு
ஆனாலும் அம்மா உங்கள் நீங்காத
நினைவுக்காக என் நெஞ்சம்
நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலியை
ஆழ்ந்த பாசத்துடனும் நிறைந்த
நேசத்துடனும் வணங்கி சமர்ப்பிக்கின்றேன்.
தகவல்:
குடும்பத்தினர்