Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகேஸ்வரி ஆலாலசுந்தரம்
ஓய்வு பெற்ற ஆசிரியை - St. Clair Balika மகாவித்யாலயம், கொழும்பு
இறப்பு - 19 MAY 2012
அமரர் நாகேஸ்வரி ஆலாலசுந்தரம் 2012 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி ஆலாலசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்

தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்

ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்

நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices