

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவபாலன் அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தினி, சுகந்தினி, காலஞ்சென்ற சிவசங்கர் மற்றும் சிறிசங்கர்(பிரான்ஸ்), ரவிசங்கர்(பிரான்ஸ்), கமலபவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் இராசம்மா, கமலாம்பிகை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சத்தியானந்தம் மற்றும் கமலதாசன், குமுதினி, றஞ்சித்பாபு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
விதுர்சன், கனிஸ்ரன், சரணிகா, மதுசாந், சஸ்மிதா, கவிசன், திரிஜா, அபிஷா, அஸ்வின், சபிர்ணா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், செல்லத்தம்பி, தம்பிராசா மற்றும் இராசமணி, கனகம்மா, குணரெத்தினம், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், வீரசிங்கம் மற்றும் மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2020 புதன்கிழமை அன்று பி.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக் கிரியைக்காக கேரதீவு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.