4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகரட்ணம் ஞானேஸ்வரி
வயது 75
Tribute
29
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகரட்ணம் ஞானேஸ்வரி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்!
அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே...
அம்மா என்றும் எங்கள் மனதில்
மறையாது மறக்கவும் முடியாது
கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
உன் மடிதேடி, எம் தலைசாய்ந்து,
உன் கையிலே உணவருந்தி எல்லாமே மாயமாய்
போனது ஒரு நொடியில் ஆயினும்
உன் நினைவலைகள் தொடரும்
எம் காலம் முடியும் வரை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். மகள் கீதா குடும்பம்