ஐந்திரண்டு மாதம் சுமந்து
வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
ஆனால் இருபது வருடமாய்
சுமக்காமல் சுமந்தாயே என்ன சொல்ல உன்னை .
தோளில் சுமந்தாலும் ,
வார்த்தையால் வழி நடத்திய,
கண்ணரிந்த தெய்வம் நீ
வெளிப்படையாய் அன்பு காட்டி
நடிக்கும் மனிதர்கள் மத்தியில்
உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால்
என்னை வழி நடத்தியவன் நீ
உன் பேரப்பிள்ளைகளையும் எம்மையும்
காண பேராசையோடு தவித்தாயே!
ஓரிரு கிளமையில் உங்களை காண வருவேனென ஆசைவார்த்தை கூறிவிட்டு
நாம் காண முடியாத தூரம் எம்மை
தவிக்கவிட்டு சென்றதேனோ!!
நற்பழக்கம் கற்றுத்தந்து, உன்னை உருக்கி எம்மை வளர்த்தெடுத்த அப்பா! உன்னை
நாம் பார்க்கும் காலத்தில் எம்மை
ஏங்க விட்டு சென்றாய் விண்ணில்!
என்றும் நீயே என் வழிகாட்டி
என்றும் நீயே என் தெய்வம் தந்தையே !!
என்றும் என் செல்ல அப்பாவுக்காய்
ஏங்கும் உன் செல்ல மகன் தனுஷன்.
We are very saddened about the sudden tragedy.Words are inadequate to express our sympathy.