10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவில் செபமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகர் சின்னையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே!
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute