
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகன் நாகமணி அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகன், தெய்வி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,
உத்தமபுத்திரன்(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), பாஸ்கரன்(நில அளவையாளர்- வவுனியா), பாலமனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகவதி, ஜஸ்மின் குமுதினி, கசில்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, நடராசா, செல்லம்மா, மார்க்கண்டு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷடோன், அக்ஷா, கிருஷிகேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப் புல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.