யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா இல.99 பெரியதம்பனையை வதிவிடமாகவும், பின்னர் இல.133 முதலியார் குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், இல. 407 திருநாவற்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து தம்பிஐயா அவர்கள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பூமணி(வள்ளியம்மை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தாரணி(ஜேர்மனி), பிரதாப்(பிரான்ஸ்), ஜெனனி(முன் பள்ளி ஆசிரியை), கஸ்தூரி, கோகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீசன்(ஜேர்மனி), தனுஷியா(பிரான்ஸ்), போகுலநீதன்(கனடா), சுப்ரீபன்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புகனேஸ்வரி(புவனேசு), வனிதரத்தினம்(இரத்தினா), காலஞ்சென்றவர்களான தியாகவதி(ஓய்வுநிலை அதிபர்), தில்லைஅம்பலம் மற்றும் கருணாராணி, கருணாம்பிகை(கனடா), தர்மநாயகி(நோர்வே), காலஞ்சென்ற நாகேஸ்வரன், டயோசினி(ஓய்வு நிலை ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்துக்குமாரு(ஓய்வுநிலை காணி உத்தியோகத்தர்), கனகரத்தினம்(ஓய்வு நிலை கிளை முகாமைப்பாளர்), காலஞ்சென்ற நாகலிங்கம்(தாதிய உத்தியோகத்தர்), கலாநாயகி, தேவரத்தினம், ஐயம்பிள்ளை, தேவராஜா, காலஞ்சென்ற துரைரத்தினம், புஷ்பராணி(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், கணேசலிங்கம்(ஜேர்மனி), கலைச்செல்வி(ஓய்வுநிலை ஆசிரியை), தேவதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சஸ்வின், சஸ்விகா, சாத்விகா, மயிலன், ஆதிரன், அனனியா, அகர்சிகா, அன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் இல. 407 மூன்றாம் ஒழுங்கை, திருநாவற்குளம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.30 மணியளவில் பெரியதம்பனை இந்துப் பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94766671530
- Mobile : +33751313476
- Mobile : +94769788085
- Mobile : +94762930946
- Mobile : +94777128043