Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUL 1933
இறப்பு 18 JUL 2020
அமரர் நாகமணி நடராசா
ஓய்வுபெற்ற கணக்காளர்- கரைச்சி வடக்கு ப.நோ.கூ.சங்கம் பரந்தன்
வயது 87
அமரர் நாகமணி நடராசா 1933 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, அரியாலை, வத்தளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி நடராசா அவர்கள் 18-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரகதவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுந்தரராசா(பிரான்ஸ்), தங்கராணி(முன்னாள் ஆசிரியை- யா/கொக்குவில் இந்துக் கல்லூரி, ஜேர்மனி), தர்ஷனி(கனடா), தர்ஷிகா(கட்டிடப்பட வரைஞர்- கொழும்பு), இரவீந்திரராசா(பிரித்தானியா), Dr.குகானந்தராசா(கொழும்பு), திலகராசா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பண்டிதர் கந்தையா, வேலாயுதம்பிள்ளை(வர்த்தகர்), சேதுப்பிள்ளை, மாணிக்கம், மார்க்கண்டு(நிலவளவையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயஜினி(பிரான்ஸ்), யோகரட்ணம்(ஜேர்மனி), தவராசா(கனடா), ரதிகா(பிரித்தானியா), Dr.பிரதீபா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, பத்மநாதன், மங்கயற்கரசி, மகேஸ்வரி மற்றும் இலங்கநாதன், மங்களாம்பாள், பர்வதபத்தினி,
காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, ஶ்ரீபத்மா, கமலா மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸா, சதீஸ், சகிதன், சனோஜா, அபிநயா, அபிந்தா, அபிஷ்னா, அக்‌ஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-07-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கனத்தை மைதானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்