
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ராஜேந்திரன் அவர்கள் 19-01-2020 ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(மலேசியன் பென்சனியர்), அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அற்புதவல்லி(சூட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
றஜனி(பிரான்ஸ்), றஞ்சித்(CRO PABC BANK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பலதா, திருச்செல்வி, பாலேந்திரன்(கிற்றி) மற்றும் மகேந்திரன்(கிச்சான்), திருமதிகாந்தி(டிங்கா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தக்குமார்(பிரான்ஸ்), அர்ஜனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகசபை, ராஜேஷ்வரி, பொன்னம்மா, பிறைசூடி(கனடா), அமுதவதி(ரூபி), கமலவதி(பேழி), விமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராஜா, காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம், அமுதகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற கனகசபை, கீர்த்திராணி தம்பதிகள், செல்வநேசன் நாகபூஷணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
சாஜினி, பிரஷானி, ஹரிணி, தீஷிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-01-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.