யாழ். பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், கரணவாய் தெற்கு வளவன் தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா மகாதேவி தம்பதிகளின் மருமகனும்,
பாலகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தபஸினி, சுபாங்கினி(யாழ் மருதனார்மடம் அக்கடமி) ஆகியோரின் தந்தையும்,
சண்முகலிங்கம்(ஜேர்மனி), வாசுகி(சுவிஸ்), சத்தியலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார் (கனடா), நந்தகுமாரி(ஜேர்மனி), மோகன்குமார்(லண்டன்), கமலகுமாரி(பிரான்ஸ்), கிருஸ்ணகுமாரி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
செட்டிகுறிச்சி
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details