

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சீவரத்தினம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி, சபேசன், சசிலினி, கேதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கமணி, புவனேஸ்வரி மற்றும் சண்முகம், சின்னத்துரை, இரத்தினேஸ்வரி, விஜயலட்சுமி, மகாலட்சுமி, யோகம்மா, ராசலிங்கம், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவதாசன், சுகன்யா, வசந்தகுமார், சிறீக்குமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிர்மலமூர்த்தி, பாலசிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கயானன், தரணியன், வதீஷனா, லதீஷன், லதீனா, கிருஷாந்தி, பார்த்தீபன், புவிதா, வினோஜன், அபிஷா, அனிஷ், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.