10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சென்பீற்றர் லேனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசா ஜெகசோதியம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டு பத்து ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
வளர்த்தவள் அன்பு போல் வருமா?
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாயம்மா…!
நினைவெல்லாம் உங்களைச் சுமந்தல்லோ
நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே அங்கே நீங்களம்மா
உங்கள் முகம்தானே பட்டொளியாய் தெரிகிறது!
ஆண்டுகள் பல சென்றாலும்- எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும்
உம் பிரிவால் மீள முடியாமல்
நீரில்லா
மீனைப் போல் துடிக்கிறோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
பிரதீபன் கருணாகரன்(தீபன்) -பெறாமகன்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute