
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராசா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா ஆசைமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷன்(இலங்கை), றஞ்ஜினிதேவி(பரீஸ்), காலஞ்சென்ற மாலினி, குமுதினி(சுவிஸ்), பிரமிளா(இலங்கை), பாமினி(சுவிஸ்), யோகநந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி, தவமலர், காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாதேவன், சத்தியசீலன், ராசகுமார், விஜிகரன், திருவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசிங்கம், கந்தசாமி, நவநீதரம்பை, பாலசுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, சந்திரா மற்றும் காலஞ்சென்ற மனோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜன், ராகுல், பிரவீன், திவானுஜன், விதுரன், விதுதா, புவிதன், சங்கீத், திலக்ஷன், தீபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.