5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:03/12/2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மூத்த விநாயகர் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜன் ராஜேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள எங்கள்
அம்மாவே அன்பால்
எங்களை காத்தவளே பாசம்
காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
எங்களையெல்லாம் கண்ணீர்
கடலில் மூழ்க விட்டு எங்கு
சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு உன்
அன்பும் ஈடாகுமே அம்மா!
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபகங்கள் கண்ணீரையும் தந்து
கொண்டேயிருக்கின்றன..!
தகவல்:
பிள்ளைகள்.
Sending our prayers and deepest condolences to you and your family.