
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜன் குகானந்தன் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நடராஜன் மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகனும், கோண்டாவில் கிழகைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(காலி லீலா ஸ்டோர்ஸ்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வரதராஜன், சிவானந்தன்(பிரான்ஸ்), ரஞ்சினி(கனடா), நித்தியானந்தன்(கனடா), சிவராஜன்(கனடா), ராஜினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராஜா, மங்கா, ஆனந்தி, ஸ்ரீ முருகதாஸ், திருமதி கணேசன்(அவுஸ்திரேலியா), திருமதி பாஸ்கரன், திருமதி ஆனந்தலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற திருமதி சோதிநாதன்(பிரித்தானியா), சுந்தரலிங்கம், திருமதி பரதராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற யோகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2020 சனிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.