யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிறிவிஜயா அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசம்மா தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு கமலாதேவி தம்பதிகளின் மருமகனும்,
யோகேஸ்வரி(இளைப்பாறிய இலங்கை வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தாரணி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணகுமார்(பிரித்தானியா), பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துவாரகன், பிரதீபா, ரதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறீகாந்தா, வசந்தா, சாந்தா, சிறீமகேஸ்வரி, சோமாவதி, அனுசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மீனாம்பிகை, கணேசராசா, தவராசா, சிவராசா, அருட்கந்தராசா, பாஸ்கரன், நாகேஸ்வரி, சின்னத்தம்பி, குலேந்திரன், தனலட்சுமி, அன்னலிங்கம், விஜயாபவன், காலஞ்சென்ற இராஜேஸ்வரி, செல்வேந்திரன், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ஜூன், மித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கந்தர்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.