

யாழ். இணுவில் வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இராஜேஷ்வரி அவர்கள் 03-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
தர்மசீலன்(பிரான்ஸ்- கபறினா ஸ்தாபனம்), தாரணி(இலங்கை), ஜெயசீலன்(இலங்கை), குணசீலன்(குணா- பிரான்ஸ், கபறினா ஸ்தாபனம்), தர்மினி(கனடா), மயூரினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், இராஜலிங்கம், இராஜரத்தினம், கனகமணி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உஷாயினி(பிரான்ஸ்), பத்மநாதன்(இலங்கை), கௌரி(இலங்கை), துஷ்யந்தா(பிரான்ஸ்), தவராஜா(கனடா), அருணன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கண்மணி, சரஸ்வதி, முதலித்தம், தியாகராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மகேந்திரராஜா- நந்தாவதி, கனகேஸ்வரன்- பிரபா, காலஞ்சென்ற சோதிராஜா- உமாநிதி, தவராஜா- தர்மினி ஆகியோரின் ஆசை அத்தையும்,
நவிராஜ், அபிநாஷ், ஜீவந்திகா, சஜிதா, சரணிகா, சானுஜா, சர்வதன், வர்னுஜா, லக்ஷ்னா, லரண்யா, துஷ்ஜான், றோஷ்ஜான், சன்ஷ்கா, சன்ஷத், டர்ஷா, லிதுர்ஷா, சஜீபன், ராதிகா, கபிலன்- சர்மினி, ஆனந்தன், நிராஜ், அனோஜ்- நிலுஜா, துஷ்ஜான், றோஷ்ஜான் ஆகியோரின் ஆசைமிகு பேத்தியும்,
ஆதித்தியன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.