
யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராசா புவனேஸ்வரி அவர்கள் 09-11-2019 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமுகந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பாதேவி, சித்திரா, பிள்ளையார் மலை மற்றும் நாகேஸ்வரி, அஞ்சனாதேவி, தேவராணி, சித்திவிநாயகர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பிள்ளையார், சோமசுந்தரம், சிவயோகநாதன் மற்றும் தியாகராஜா, சுப்பிரமணியம், சத்தியா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 14-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இராமநாதபுரம் வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.