1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா கமலாம்பிகை
வயது 83
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி நல்லூர் முத்திரைச் சந்தி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா கமலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிரத்தைப் பாலாக்கி எமக்கு ஊட்டியவளே!
எம்மை அன்புடன் அரவணைக்க அருகில்
நீங்கள் இல்லாமல் தவிக்கின்றோம் நாங்களம்மா!
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழி காட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!
சிரித்துக் கொண்டே கண்ணீர் எம் கண்களில்
நிலையான நினைவுகளில் அழியாத கனவுகளில்
காலையும் மாலையும் எம் நினைவுகளில்
ஆண்டுகள் கடந்தாலும் அழியாத சித்திரமாய்
எம் ஆன்மா உன் திருவடி சேரும் வரை
வையத்து வாழ்வினை தந்து வாழ்வாய் தாயே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்