15ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ் சாவக்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பாரிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகமணி செல்லையா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே ஐயா!!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள் ஐயா !
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள் !
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர்
தூவி இறைவனோடு இணைய
எங்கள் குல தெய்வமான மீனாட்சி அம்மனை
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்