
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி எள்ளுக்காடு சக்திபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நா. வை. குகராசா அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி(போதனா ஆசிரியை- ஓய்வு கால்நடை திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஓவியா(ஆசிரியை- பயிலுனர் மகாவலி தேசியக் கல்வியற் கல்லூரி), நித்திலன்(ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்- பதுளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரராசா(குமரிவேந்தன்- ஓய்வுபெற்ற மின்பொறியியல், கண்காணிப்பாளர்), காலஞ்சென்ற அரியராசா(தொலைத் தொடர்பு பரிசோதகர்), பரமராசா(மேனாள் முகாமையாளர் பாற்சபை- கிளிநொச்சி, கனடா), புவனேந்திரராசா கோணேஸ்வரி, சிறில் சாந்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பசுபதி புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் கனகம்மா, அருளப்பு யோகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கோபால்(காவல்துறை அதிகாரி) மற்றும் வரதராசா சேதுப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை-கனடா), சிவஞானசுந்தரம் பார்வதி, பேரம்பலம்(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்- கனடா), துரைராசா(மேனாள் பள்ளி முதல்வர்), குலசிங்கம் புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மகேந்திரராசா புனிதலீலாவதி, பரமராசா பவானி, காலஞ்சென்ற கந்தையா புவனேந்திரராசா மற்றும் வஸ்தியாம்பிள்ளை சிறில் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இல.677, செல்வாநகர்(கனகபுரம் மாவீரர் துயிலிமில்லத்திற்கு அருகில்) அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மு.ப 09:30 மணியளவில் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மலர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் கரைச்சி பிரதேச சபையில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்று பின்னர் திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
miss you a lot siththappaa