

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு நட்டாங்கண்டல் இலக்கம் 171, பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பஞ்சலிங்கம் அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துக்குமாரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மதியாபரணம் வதனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பத்மலிங்கம், கேதாரலிங்கம்(கனடா), கோமதி, சந்திரமதி, கணேசலிங்கம்(கனடா), கலைமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஜிதா(கிராம அலுவலகர் அரியாலை யாழ்ப்பாணம்), சோபிகன், கயல்வேந்தன், டர்சனா(மாணவி, இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேசவன்(பாடசாலை பணியாளர் புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
வாசுகி(கனடா), ஜெயரட்ணம்(சின்னன்), ஜெயவதனி(ஓய்வுபெற்ற வைத்தியசாலை ஊழியர்), தவராசா(சந்திரன்), தேவகுஞ்சரி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நகுலஸ்ரீ(ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலகர்), காலஞ்சென்ற பவளராணி, ராகினிதேவி, மோகனராஜ்(கனடா), தண்மதி(ஓய்வுபெற்ற வைத்தியசாலை ஊழியர்), ஜெகதீஸ்வரன்(லண்டன்), சத்தியபாமா, வாகீசு(ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மிர்னாலினி(கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் துணுக்காய்), மதுசாளினி, சுபாஸ், மிதுர்ஷா, கீர்த்தனா, தருசன், கனுசியன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிஷானி, நிஷா, அகிலவன், கஜானன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பாண்டியன்குளம் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details