Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 04 NOV 1932
மறைவு 16 FEB 2024
அமரர் முருகேசு வள்ளியம்மா 1932 - 2024 யாழ் உடுப்பிட்டி இமையாணன் மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு வள்ளியம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் முருகேசு வள்ளியம்மா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 15-03-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் “கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும்” வீட்டுகிருத்திய நிகழ்வுகள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
177, சந்திதி வீதி,
கதிரிப்பாய்,
அச்சுவேலி.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.