7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டி வதிரியூர் மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவீடனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு நவரத்தினம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும்
செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
ஆண்டு ஏழு கடந்தாலும்
ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல்
எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே
ஆறிடுமோ
எங்கள் துயரம்
விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப்
பொறுத்திடத்தான் முடியுமோ?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute